2 7
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு வருகிறார் இந்திய பிரதமர் மோடி

Share

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி(narendra modi) எதிர்வரும் ஏப்ரல் மாதம் இலங்கைக்கு (sri lanka) பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக இலங்கை வட்டார தகவல்களின்படி, இந்தப் பயணம் இன்னும் வலுவடைந்து வருவதாகவும், ஏப்ரல் 5 ஆம் திகதி அளவில் பயணம் இடம்பெறக்கூடும் என்றும், இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

பிரதமர் மோடியின் பயணத்திற்கான அழைப்பை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க(anura kumara dissanayake) 2024 டிசம்பர் நடுப்பகுதியில் புதுடில்லிக்கு மேற்கொண்ட இரண்டு நாள் பயணத்தின் போது விடுத்திருந்தார்.

2024 செப்டம்பரில் அநுர குமார, ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அவரின் முதல் வெளிநாட்டுப் பயணம் இந்தியாவாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின் போது, ஏழு கடன் திட்டங்களுக்கான 20 மில்லியன் டொலர் கொடுப்பனவுகளை மானியங்களாக மாற்றுவதாக இந்திய அரசாங்கம் அறிவித்தது, இது இலங்கையின் கடன் சுமையைக் குறைத்தது.

2022 ஆம் ஆண்டு நாடு எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது டில்லி கொழும்புக்கு அளித்த 4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஆதரவை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...