tamilni 7 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

இந்தியா – இலங்கை கப்பல் சேவை நிச்சயம் ஆரம்பிக்கப்படும்: உறுதியளித்துள்ள ஜெய்சங்கர்

Share

இந்தியா – இலங்கை கப்பல் சேவை நிச்சயம் ஆரம்பிக்கப்படும்: உறுதியளித்துள்ள ஜெய்சங்கர்

நிதிச் சுமைக்கு உள்ளான மத்தள சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகம் அடுத்த சில வாரங்களில் இந்திய மற்றும் ரஸ்ய நிறுவனங்களுக்கு இடையிலான கூட்டு முயற்சியிடம் விரைவில் ஒப்படைக்கப்படும் என இலங்கை அறிவித்துள்ளது.

இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 69 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேசிய விமான சேவை நிறுவனமான சிறிலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படுவதற்கு பதிலாக மறுசீரமைப்புக்கு உட்படுத்தப்படும் என அமைச்சர் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தற்போதுள்ள விதிமுறைகளின் படி, விமான நிறுவனத்தின் பங்குகளில் 49வீதத்தை மட்டுமே வேறொரு நிறுவனத்திற்கு மாற்ற முடியும், எனினும் பொருத்தமான முதலீட்டாளர் இதுவரை விருப்பம் தெரிவிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கிடையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், எதிர்காலத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் கப்பல் சேவையை மீண்டும் ஆரம்பிக்கும் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளதாகவும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...