'அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது - ஷெஹான் சேமசிங்க
அரசியல்இலங்கைசெய்திகள்

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது – ஷெஹான் சேமசிங்க

Share

அஸ்வெசும‘ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெறாது – ஷெஹான் சேமசிங்க

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய சிறுநீரக நோயாளர்களுக்கான கொடுப்பனவு , அங்கவீனமுற்றோருக்கான கொடுப்பனவு மற்றும் முதியோருக்கான கொடுப்பனவு என்பவற்றைப் பெறும் பயனாளர்களுக்காக புதிய அளவுகோள்கள் அறிமுகப்படுத்தப்படுவம் வரை , இதுவரை வழங்கப்பட்டு வந்த கொடுப்பனவுகளில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் வேறு நிலையற்ற , அனர்த்தங்களை எதிர்கொண்ட வறுமை நிலையிலுள்ள மற்றும் மிகவும் வறுமை நிலையிலுள்ள 4 சமூக பிரிவின் கீழ் ‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுகளை வழங்குவதிலும் எவ்வித மாற்றங்களும் இடம்பெற மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் 760 000 ஆட்சேபனைகளும், 10 000 எதிர்ப்புக்களும் கிடைக்கப் பெற்றுள்ளன. அஸ்வெசும நலன்புரி வேலைத்திட்டத்துக்காக முதலாவது சந்தர்ப்பத்தில் விண்ணப்பிக்க முடியாமல் போனவர்களுக்கும் , அதே போன்று புதிதாக விண்ணப்பிக்க எதிர்பார்ப்பவர்களுக்கும் ஆண்டுதோரும் வாய்ப்புக்கள் வழங்கப்படவுள்ளன.

அதற்கமைய முதலாவது சந்தர்ப்பத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் ஆகஸ்ட்டில் விண்ணப்பிக்க முடியும் என்றும் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
13 11
உலகம்செய்திகள்

போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு பின்னர் காஷ்மீரில் தாக்குதல்.. பாகிஸ்தான் மறுப்பு தெரிவிப்பு

இந்தியாவுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தை பாகிஸ்தான் மீறியதாக இந்தியா கூறியதை பாகிஸ்தான் அரசாங்கத்தின் உயர் அதிகாரி...

15 11
இலங்கைசெய்திகள்

வாக்களிப்பதைத் தவிர்த்து கொழும்பில் தங்கியிருந்த 10 லட்சம் வாக்காளர்கள்

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது வேறுபிரதேசங்களைச் சேர்ந்த சுமார் பத்து லட்சம் வாக்காளர்கள், வாக்களிப்பதைத்...

16 11
இலங்கைசெய்திகள்

இலங்கையை உலுக்கிய பயங்கர விபத்து – பலி எண்ணிக்கை 21ஆக அதிகரிப்பு

றம்பொட பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21ஆக அதிகரித்துள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் ஊடகம்...

14 11
இலங்கைசெய்திகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு தொடர்பில் மின்சார சபையின் அறிவிப்பு

மின்சார கட்டணங்களை உயர்த்துவதற்கான முன்மொழிவை இலங்கை மின்சார சபை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திடம்...