11 5
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

Share

அமெரிக்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கையால் அச்சத்தில் மக்கள்

அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் சுனாமி முன்னெச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் (USA) வடக்கு கலிபோர்னியாவின் ஃபெர்ண்டலே பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று (5.12.2024) ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலநடுக்கம் கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் கடுமையாக உணரப்பட்டது. இதனால் வடக்கு கலிபோர்னியா கடற்கரை பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கியதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மக்கள் பீதி அடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடிய காட்சிகள் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு பின் சுனாமி முன்னெச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
676UZCCBMZLTRIE75Y7UFJ5TZA
செய்திகள்இலங்கை

அதிக விலைக்கு கேரட் விற்பனை செய்த வர்த்தகர் மீது வழக்கு: சோதனைகள் தீவிரம்!

மோசமான வானிலையைப் பயன்படுத்தி, காய்கறிகள் மற்றும் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை...

25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...