அத்தியாவசிய தேவைக்கு தடை இல்லை- இராணுவத் தளபதி!!
இலங்கையில் இன்று (20) இரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 04 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது என்று இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த ஊரடங்கு காலப்பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகள், மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தவிர 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் இக் காலப்பகுதியில் அவர்களது வீடுகளுக்கே சென்று தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது எனவும் இராணுவத் தளபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Leave a comment