vagi 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வார இறுதியில் நுவரெலியா – யாழ்ப்பாண மரக்கறி விலைகள்: போஞ்சி கிலோ ரூ. 800!

Share

வார இறுதி நாளான இன்று பொருளாதார மத்திய நிலையங்களில் மரக்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ள விலைப்பட்டியல்கள் வெளியாகியுள்ளன.

அதன்படி, நுவரெலிய மற்றும் யாழ்ப்பாணம் பொருளாதார மத்திய நிலையங்களின் விலைப்பட்டியல்களில் மாற்றம் ஏற்பட்டிருந்தன.

அதற்கமைய, யாழ்ப்பாணத்தில் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோகிராம் கோவா, நுவரெலியாவில் 210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் ஒரு கிலோகிராம் போஞ்சி, 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் ஒரு கிலோகிராம் கரட், யாழ்ப்பாணத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிலோகிராம் தக்காளி யாழ்ப்பாணத்தில் 450 ரூபாய்க்கும், நுவரெலியாவில் 300 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

நுவரெலியாவில் 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் லீக்ஸ், யாழ்ப்பாணத்தில் 350 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

நாட்டில் நிலவிய அதிதீவிர வானிலையால் 20 சதவீத மரக்கறிகள் மாத்திரமே அழிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், நகர்ப்புறங்களிலுள்ள தனியார் வர்த்தக நிலையங்களில் அதிகரித்த விலையிலேயே மரக்கறி விற்பனை செய்யப்படுவதை அவதானிக்க முடிகிறது.

Share
தொடர்புடையது
25 693fd3d85a76b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊவா மாகாணத்தில் உள்ள 892 பாடசாலைகளும் இன்று நண்பகலுடன் மூடல் – சீரற்ற வானிலையால் அதிரடி முடிவு!

ஊவா மாகாணத்தில் தற்போது நிலவி வரும் கடும் மழை மற்றும் சீரற்ற வானிலை காரணமாக, மாகாணத்திலுள்ள...

1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...