1637578244 1637574442 Rice L
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உணவுப் பொதியில் விலையும் அதிகரிப்பு!

Share

நாடாளுமன்ற உணவு விடுதியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சோற்று பொதியின் விலை 100 ரூபாவினாலும், ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படும் சோற்று பொதியின் விலை 50 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினருக்கான சோற்றுபொதியின் விலை ரூ.200 ஆக இருந்தது. புதிய விலை திருத்தத்தின்படி ரூ.300 ஆக உயரும்.

பாராளுமன்ற ஊடகவியலாளர் ஒருவரின் உணவுக்காக இதுவரை செலவிடப்பட்ட தொகை நூறு ரூபாவாக இருந்த நிலையில் அது 150 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமையை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற உணவு விடுதியில் இருந்து உறுப்பினர்கள் உட்பட பல்வேறு குழுக்களுக்கு வழங்கப்படும் உணவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நாடாளுமன்றத்தில் உணவு மற்றும் பல்வேறு பானங்களுக்காக சுமார் 15 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#srilankanews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
24 6628d315dc43c
செய்திகள்இலங்கை

தரம் 6 பாடப்புத்தகத்தில் ஆபாச இணைய முகவரி: கல்வி அமைச்சின் செயலாளரைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

புதிய கல்விச் சீர்திருத்தத்தின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக அச்சிடப்பட்ட ஆங்கிலப் பாடப்புத்தகங்களில், ஆபாச இணையத்தளம்...

24 6628d315dc43c
செய்திகள்இலங்கை

திருடனுக்குத் தண்டனை எனப் பரப்பப்பட்ட காணொளி வெறும் டிக்டொக் நாடகம்: மதுபானத்திற்காகத் தலைகீழாகத் தொங்கிய நண்பன்!

ஆடை திருடிய நபரைத் தலைகீழாகத் தொங்கவிட்டுத் தண்டிப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வைரலான காணொளி, மதுபானத்திற்காகத் திட்டமிட்டு...

1769359891 pak navy
செய்திகள்இலங்கை

நடுக்கடலில் தத்தளித்த இலங்கையர்: 1,500 மைல் தொலைவில் மனிதாபிமானத்துடன் மீட்டது பாகிஸ்தான் கடற்படை!

பாகிஸ்தான் கடற்கரையிலிருந்து சுமார் 1,500 கடல் மைல் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில், கடும் உடல்...

Beijing Capital Airlines A330
செய்திகள்இலங்கை

இலங்கை – சீனா இடையே புதிய வான்வழித் தொடர்பு: பெய்ஜிங் கெபிடல் எயார்லைன்ஸ் விமானம் கட்டுநாயக்க வருகை!

இலங்கை மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான வான்வழித் தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் வகையில்,...