நல்லூர் ஆலய சூழலில் திறக்கப்பட்ட அசைவ உணவகம், மக்களுடைய உணர்வுகளுக்கு மதிப்பளித்து சைவ உணவகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
நல்லூர் தலத்துக்கு அருகில் அசைவ உணவகம் அமைக்கப்படுவதற்கு எதிராக அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
குறித்த அசைவ உணவகம் அமைக்கும் நடவடிக்கை மதச்சாந்தி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு எதிரானது என்பதனை வெளிப்படுத்தும் முகமாக இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அத்துடன், இது தொடர்பில் தமிழ்ச் சைவ பேரவையின் அழைப்பின் பெயரில் சைவ அமைப்புக்களின் விசேட கலந்துரையாடலும் நடாத்தப்பட்டது.