அவசரகால நிலை எதற்கு? – தெளிவுபடுத்தக் கோருகிறார் சஜித்

sajith 3

நாட்டில் எதற்காக அவசரநிலைமை பிரகடனப்படுத்தப்பட்டது என்பதற்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபையில் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் இன்று இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,

” நாட்டில் திடீரென அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னர் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டது. சமூகவலைத்தளங்களும் முடக்கப்பட்டன. இவற்றுக்கான காரணத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நாட்டில் நிதி அமைச்சர் இல்லை, திறைசேரி செயலாளர் பதவி விலகியுள்ளார். ஏன் இந்த நிலைமை” என்றார்.

#SriLankaNews

Exit mobile version