599930085 1542770143558035 1968667072831543849 n
செய்திகள்அரசியல்இலங்கை

ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் அழிவு: நீர்ப்பாசனக் கட்டமைப்புச் சேதம் 22 பில்லியன் ரூபாயை எட்டியது!

Share

அண்மைய அனர்த்தங்கள் காரணமாக இலங்கையின் விவசாயத்துறை மற்றும் நீர்ப்பாசனக் கட்டமைப்புகள் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியியல் மற்றும் பேரிடர் மேலாண்மை) பொறியாளர் எல்.ஏ.எஸ். சூரியபண்டார தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பயிரிடப்பட்டிருந்த சுமார் ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர்கள் இயற்கை இடர் காரணமாக முற்றாகச் சேதமடைந்துள்ளன. சேதமடைந்த நிலங்களில் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் இந்த போகத்திலேயே மீண்டும் பயிரிடத்தக்க வகையில் சீரமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்குத் தேவையான நீர்ப்பாசன வசதிகளும் தற்போது வழங்கப்பட்டுள்ளன.

கால்வாய்கள், நீர்வழிகள் மற்றும் குளங்கள் உள்ளிட்ட நாட்டின் நீர்ப்பாசனக் கட்டமைப்புகளுக்கு ஏற்பட்ட மொத்தச் சேதம் 22 பில்லியன் ரூபாயை நெருங்கியுள்ளது.

இந்த பாரிய சேதங்களில் கணிசமான எண்ணிக்கையிலான நீர்ப்பாசனக் கட்டமைப்புக்கள் ஏற்கனவே தற்காலிகமாகச் சீரமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனப் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கும், எஞ்சிய நீர்ப்பாசனக் கட்டுமானங்களை நிரந்தரமாகச் சீரமைப்பதற்கும் அரசாங்கம் துரித நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

 

 

Share
தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...