MediaFile 2 8
செய்திகள்இலங்கை

முகமாலையில் ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பலி!

Share

யாழ்ப்பாணம், முகமாலைப் பகுதியில் இன்று இடம்பெற்ற கோர ரயில் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிப் பயணித்த ‘யாழ் தேவி’ ரயிலுடன், ரயில் வழித்தடத்திலுள்ள பாதுகாப்பற்ற கடவையின் ஊடாகச் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

இந்த விபத்தில் யாழ்ப்பாணம், ஆனைப்பந்தி பகுதியைச் சேர்ந்த இரத்தினராசா கிருஷ்ணமோகன் (52) என்ற குடும்பஸ்தரே உயிரிழந்துள்ளார்.

விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்த பளை பொலிஸார், சடலத்தை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவைகளைப் பயன்படுத்தும் போது பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாகப் பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...