அனைத்து வீடுகளுக்கும் ஆயுள்வேத மருந்து!

24

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் திட்டம்  அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீடுகளுக்கும் ஆயுர்வேத மருந்துகள் விநியோகிக்கப்படவுள்ளது.

அடுத்த வாரம் முதல் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுள்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி, சமூக ஆரோக்கிய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.

இத் திட்டத்தையொட்டி கொரோனாத் தொற்றிலிருந்து ஒவ்வொருவரையும் பாதுகாக்கும் பொருட்டு சகல வீடுகளுக்கும் உள்ளூர் மருந்துப்பெட்டி விநியோகிக்கும் திட்டம் அடுத்த வாரம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது என  அவர் கூறியுள்ளார்.

இம் மருந்துப் பெட்டியில் ஆயுள்வேத மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக வழங்கப்படும் நோய் தடுப்பு பானம் மற்றும் மூலிகைப்பொடி ஆகியவை உள்ளடக்கப்பட்டுள்ளன.

மருந்துகள் உள்ளடங்கிய பெட்டியானது முதலில் நோய் பரவிய பகுதிகளை இலக்கு வைத்து விநியோகிக்கப்பவுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version