electrician at work stockcake
செய்திகள்இலங்கை

இனி எலக்ட்ரீஷியன்களுக்கு உரிமம் கட்டாயம்! NVQ தகுதி இன்றி மின் வேலைகள் செய்யத் தடை!

Share

இலங்கையில் மின் பாதுகாப்பு மற்றும் பொறியியல் தரத்தை உறுதிப்படுத்தும் நோக்கில், மின்சார வல்லுநர்களுக்கான (Electricians) புதிய உரிம முறையை இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் (PUCSL) மற்றும் இலங்கை பொறியியல் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளன.

இலங்கை பொறியியல் கவுன்சில் வெளியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவிப்பின்படி, மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்ட வீடுகள் மற்றும் கட்டிடங்களில் மின் வயரிங் பணிகளை மேற்கொள்ள இனி முறையான தகுதிகள் அவசியமாகும்.

மின் பொறியியலில் குறைந்தபட்சம் தேசிய தொழிற்கல்வி தகுதி நிலை 3 (NVQ 3) பெற்றவர்கள் மட்டுமே தகுதிவாய்ந்த எலக்ட்ரீஷியன்களாக அங்கீகரிக்கப்படுவார்கள்.

2030 ஆம் ஆண்டு முதல் NVQ 4 அல்லது அதற்கு மேற்பட்ட தகுதிகளைப் பெற்ற தொழில்நுட்ப வல்லுநர்கள் மட்டுமே இந்தப் பணிகளில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள்.

தற்போது இத்துறையில் அனுபவம் இருந்தும் NVQ தகுதி இல்லாதவர்களுக்கு வசதியாகப் பின்வரும் சலுகைகளை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் அறிவித்துள்ளது:

முன் கற்றல் அங்கீகாரம் (Recognition of Prior Learning – RPL) முறையின் மூலம் அனுபவமுள்ளவர்களுக்கு விரைவாக NVQ 3 சான்றிதழ் வழங்கப்படும்.

இறுதித் தேர்வுக்குத் தயாராகும் வகையில் இரண்டு நாள் விசேட பயிற்சி அளிக்கப்படும். எலக்ட்ரீஷியன்களுக்கான தேர்வுக் கட்டணங்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையமே முழுமையாகப் பொறுப்பேற்றுத் தள்ளுபடி செய்துள்ளது.

இலங்கை மின்சார வாரியம் (CEB) மற்றும் லெகோ (LECO) ஆகிய நிறுவனங்களின் மின் கட்டமைப்புகளுடன் புதிய இணைப்புகளைப் பெறுவதற்கு, அங்கீகரிக்கப்பட்ட தகுதிவாய்ந்த எலக்ட்ரீஷியன்களால் மின் கட்டமைப்பு நிறுவப்பட்டிருப்பது இனி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் கசிவு மற்றும் தீ விபத்துகளைத் தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...