puji
செய்திகள்உலகம்

லிபியத் தேர்தல்-கடாபியின் மகனுக்கு இடமளித்ததா நீதிமன்று?

Share

லிபியா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு, கடாபியின் மகனுக்கு, அந்நாட்டு நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது.

லிபியாவில் 50 வருடங்களுக்கு மேலாக சர்வாதிகார ஆட்சி புரிந்தவராக மோமர் அல் கடாபி கருதப்படுகிறார்.

அதனையடுத்து கடந்த 2011ஆம் ஆண்டு அவர் கிளர்ச்சிப் படைகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இதேவேளை அந்நாட்டில் தற்போது முகமது அல் மெனிபி ஜனாதிபதியாகப் பதவி வகிக்கிறார்.

இந்நிலையிலேயே அங்கு புதிய ஜனாதிபதியைத் தேர்தெடுப்பதற்கான ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது.

குறித்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு கடாபியின் மகன் சையிப் அல் இஸ்லாம் கடாபி வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், அவரது தந்தை மீதான குற்றச்சாட்டுக்களைக் காரணம்காட்டி, அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

அந்நாட்டின் தேர்தல் ஆணையகத்தால், கடாபியின் மகனது வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு எதிராக அவர் அந்நாட்டின் மேல்நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தார்.

இதனையடுத்து குறித்த வழக்கை விசாரணை செய்த மேல்நீதிமன்றம், தேர்தல் ஆணையகத்தின் முடிவை இரத்துச் செய்து உத்தரவிட்டதுடன், கடாபியின் மகன் தேர்தலில் போட்டியிடவும் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...