Anura Kumara Dissanayake
செய்திகள்இலங்கை

மக்களின் விருப்பத்திற்கு மாறான சட்டம் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி அனுரகுமார உறுதி

Share

சாதாரண குடிமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டமியற்றும் சகாப்தம் முடிந்தது:

அதன்போது, ஆட்சியாளர்களின் தேவைகளுக்கு ஏற்பச் சட்டங்களை இயற்றுவதையும் அரசியலமைப்புகளை மாற்றுவதையும் கொண்ட சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதன்படி, தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக்கோ தனிப்பட்ட நன்மைகளை எதிர்பார்த்து எந்த முடிவும் எடுக்கப்படவோ, எந்தச் சட்டமூலங்களும் நிறைவேற்றப்படவோ அல்லது திட்டங்களும் எடுக்கப்படாது என்றும் ஜனாதிபதி அனுர குறிப்பிட்டார்.

மக்களின் நன்மை மட்டுமே ஒரே நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி, அவநம்பிக்கை அல்லது சந்தேகம் உள்ள பகுதிகளை ஆராய்ந்து, அது தொடர்பான முடிவுகளுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
GGw2UsoWoAAu19A scaled 1
செய்திகள்அரசியல்இலங்கை

மொட்டு கட்சியில் இருந்து விலகினார் சோமரதன தேரர்! – திஸ்ஸகுட்டி ஆராச்சியின் போக்கிற்கு எதிர்ப்பு!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநுராதபுர மாவட்டத் தலைவர் திஸ்ஸகுட்டி ஆராச்சியின் தன்னிச்சையான செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து,...

images 15
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலவச விசா வழங்குவதில் சட்டத் தடை! – தனியார் நிறுவன ‘விசா டீல்’ வழக்கால் முட்டுக்கட்டை என ருவான் ரணசிங்க தகவல்!

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவதில் பாரிய சட்டச்...

1996569 stone quarry
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பண்டாரவளையில் அதிர்ச்சி: வெடிவைத்தபோது பாறைகள் சரிந்து விபத்து! – இடிபாடுகளுக்குள் சிக்கிய இருவரை மீட்கப் போராட்டம்!

பண்டாரவளை – மாபிட்டிய பகுதியில் அமைந்துள்ள கல் உடைக்கும் குவாரி ஒன்றில் இன்று காலை இடம்பெற்ற...

MediaFile 1 1
செய்திகள்உலகம்

குற்றங்களுக்கு வயது தடையில்லை! – ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளுக்கான வயது 14 ஆகக் குறைப்பு; புதிய சட்டம் நிறைவேற்றம்!

ஆர்ஜென்டீனாவில் சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் குறைந்தபட்ச வயது வரம்பை 16-லிருந்து 14 ஆகக் குறைக்கும் வரலாற்றுச்...