Anura Kumara Dissanayake
செய்திகள்இலங்கை

மக்களின் விருப்பத்திற்கு மாறான சட்டம் நிறைவேற்றப்படாது: ஜனாதிபதி அனுரகுமார உறுதி

Share

சாதாரண குடிமக்கள் ஏற்றுக்கொள்ளாத எந்தவொரு சட்டமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (அக்டோபர் 17) நடைபெற்ற ஆசிரியர்களுக்கான நிகழ்வொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சட்டமியற்றும் சகாப்தம் முடிந்தது:

அதன்போது, ஆட்சியாளர்களின் தேவைகளுக்கு ஏற்பச் சட்டங்களை இயற்றுவதையும் அரசியலமைப்புகளை மாற்றுவதையும் கொண்ட சகாப்தம் தற்போது முடிவுக்கு வந்துவிட்டதாக ஜனாதிபதி வலியுறுத்தினார்.

இதன்படி, தனக்கோ அல்லது தனது அமைச்சர்களுக்கோ தனிப்பட்ட நன்மைகளை எதிர்பார்த்து எந்த முடிவும் எடுக்கப்படவோ, எந்தச் சட்டமூலங்களும் நிறைவேற்றப்படவோ அல்லது திட்டங்களும் எடுக்கப்படாது என்றும் ஜனாதிபதி அனுர குறிப்பிட்டார்.

மக்களின் நன்மை மட்டுமே ஒரே நோக்கம் என்று கூறிய ஜனாதிபதி, அவநம்பிக்கை அல்லது சந்தேகம் உள்ள பகுதிகளை ஆராய்ந்து, அது தொடர்பான முடிவுகளுக்கு ஆதரவாக நிற்குமாறு ஆசிரியர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 12 1
செய்திகள்அரசியல்இலங்கை

நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி அரசாங்கம் நகர்த்துகிறது” – ஊடக ஒடுக்குமுறை குறித்து சஜித் பிரேமதாச கடும் சாடல்!

தற்போதைய அரசாங்கம் ஊடக சுதந்திரத்தை நசுக்கி, கருத்துச் சுதந்திரத்திற்கு முட்டுக்கட்டை இடுவதன் மூலம் நாட்டை ஒரு...

25 694cd6294202f
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்கரைப்பற்று – திருகோணமலை சொகுசு பேருந்து கவிழ்ந்து விபத்து: 12 பயணிகள் காயம்!

அக்கரைப்பற்றிலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு பயணிகள் பேருந்து இன்று காலை விபத்துக்குள்ளானதில் 12 பேர்...

image 81ddc7db66
செய்திகள்உலகம்

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் குண்டுவெடிப்பு: இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் பலி!

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற சக்திவாய்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர்...

24 6639eb36d7d48
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குளியாப்பிட்டியவில் 9 நாட்களாகக் காணாமல் போன இளைஞன் சடலமாக மீட்பு: காணியில் புதைக்கப்பட்ட அதிர்ச்சிப் பின்னணி!

குளியாப்பிட்டிய, தும்மோதர பிரதேசத்தில் ஒன்பது நாட்களாகக் காணாமல் போயிருந்த 28 வயதுடைய இளைஞர் ஒருவர், காணியொன்றில்...