WhatsApp Image 2021 09 04 at 19.46.06
செய்திகள்இலங்கை

இறுதி ஊர்வலத்தில் பெருமளவு மக்கள்!!

Share

நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்ற நிலையில், அதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை சாரதியான, அச்சுவேலி நாவற்காட்டை சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது-40) நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இவர் வடமராட்சி அல்வாயில் திருணம் செய்திருந்தார். இவரது உடல் அல்வாயில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அச்சுவேலிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டிருந்தனர். இவர் செலுத்திவரும் இ.போ.ச. பேருந்தும் இறுதி ஊர்வலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 8
செய்திகள்இலங்கை

யாழ். செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு ஒத்திவைப்பு: மழை காரணமாக அடுத்த ஆண்டு ஜனவரி 19-இல் மீண்டும் ஆராய முடிவு!

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள் குறித்துத் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட்டுள்ளது....

25 6906ded777bf4
செய்திகள்இலங்கை

நான்கு முன்னணி ஒப்பந்ததாரர்களுக்கு அரச ஒப்பந்தங்களில் பங்கேற்கத் தடை: மத்திய அதிவேக வீதி ஒப்பந்தத்தில் தவறான தகவல் அளித்ததே காரணம்!

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தால் (Ministry of Transport, Highways and Urban...

image d1460108ca
இலங்கைசெய்திகள்

உயிர் அச்சத்துடன் பயணிக்கும் மக்கள்: ஒட்டுசுட்டான் பனிக்கன்குளத்தில் தொடருந்து கடவை அமைக்கக் கோரிக்கை!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் கிராம அலுவலர் பிரிவில், தொடருந்து கடவை...

25 690859776f0a2
செய்திகள்இலங்கை

காவல்துறைக் காவலில் இருந்த சந்தேகநபர் உயிரிழப்பு: கந்தேகெட்டிய சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள்!

நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இரண்டு பிடியாணைகளின் பேரில் கைது செய்யப்பட்ட 46 வயதுடைய சந்தேக நபர் ஒருவர்,...