WhatsApp Image 2021 09 04 at 19.46.06
செய்திகள்இலங்கை

இறுதி ஊர்வலத்தில் பெருமளவு மக்கள்!!

Share

நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்த குடும்பஸ்தரின் இறுதிச் சடங்கு இன்று நடைபெற்ற நிலையில், அதில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், இறுதி ஊர்வலத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டுள்ளனர்.

இலங்கை போக்குவரத்துச் சபையின் பருத்தித்துறை சாலை சாரதியான, அச்சுவேலி நாவற்காட்டை சேர்ந்த தியாகராஜா மதனபாலன் (வயது-40) நேற்று மின்னல் தாக்கி உயிரிழந்தார்.

இவர் வடமராட்சி அல்வாயில் திருணம் செய்திருந்தார். இவரது உடல் அல்வாயில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அச்சுவேலிக்கு கொண்டுசெல்லப்பட்டது.

இறுதி ஊர்வலத்தில் பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொண்டிருந்தனர். இவர் செலுத்திவரும் இ.போ.ச. பேருந்தும் இறுதி ஊர்வலத்துக்கு கொண்டுவரப்பட்டிருந்தது.

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பெரும் எண்ணிக்கையானோர் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 11
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய வீடுகளுக்கு நீர் வழங்கல் சபையின் அனுமதி கட்டாயம்: புதிய நடைமுறை விரைவில்!

இலங்கையில் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் போது, வீட்டின் உட்புறக் குழாய் கட்டமைப்புகளுக்கு (Internal Plumbing) நீர்...

world 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சூரியன் நாளை நேர் உச்சியில்: பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

இலங்கையில் நிலவும் வறண்ட வானிலைக்கு மத்தியில், நாட்டின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 07, 2026)...

world 9
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மழை மற்றும் கடும் வெப்பம்: வானிலை ஆய்வு மையத்தின் முக்கிய எச்சரிக்கை!

இலங்கையின் பல மாகாணங்களில் இன்று (ஏப்ரல் 06, 2026) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை...

world 8
உலகம்செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான் தாக்குதல்: ஈஸ்டர் தினத்தில் 4 வயது குழந்தை உட்பட 7 பேர் பலி!

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், தெற்கு லெபனானின் கஃபர்ஹதா (Kafr Hatta) கிராமத்தின்...