Landslide in Nepal scaled
செய்திகள்உலகம்

நேபாளத்தில் நிலச்சரிவு – சாவடைந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Share

நேபாளம் நாட்டில் கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி சாவடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 101 ஆக அதிகரித்துள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் மின்சாரம், தகவல் தொடர்பு உள்ளிட்ட சேவைகள் தடைப்பட்ட நிலையில் நேபாள மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
நேபாளத்தில் பருவ மழை காலம் முடிந்த பின்னரும் அங்கு மழை தொடர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இந்நிலையில், அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் பருவ மழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுக்கு சாவடைந்தோரின் எண்ணிக்கை 101 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 41 பேரை காணவில்லை.

அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு பாதித்த பகுதிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வெள்ளத்தில் 2,232 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் 49 வீடுகள், 6 பாலங்கள் மற்றும் 3 அரசு அலுவலகங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்ப்படுகிறது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...