25 67859df85222e
செய்திகள்அரசியல்இலங்கை

நாடாளுமன்றத்தில் எமது பிரதிநிதித்துவம் இல்லாதது ஒரு பாரிய வெற்றிடம்! – டக்ளஸ் தேவானந்தா ஆதங்கம்.

Share

கடந்த 30 வருடங்களாகத் தமிழ் மக்களின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பிரதிநிதித்துவமின்மை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு பாரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் (EPDP) செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தசாப்தங்களாகத் தமிழ் மக்களின் தேவைகளுக்காகவும், அரசியல் உரிமைகளுக்காகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து ஆற்றிய பணிகளை அவர் நினைவு கூர்ந்தார்.

மக்கள் ஒரு மாற்றத்தை விரும்பி வாக்களித்திருந்தாலும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சிக்கு (EPDP) குறைந்தபட்சம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியாவது நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே அந்த மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

வானொலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். நாடாளுமன்றத்தில் தமது கட்சியின் குரல் ஒலிக்காத காரணத்தால், தமிழ் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகளை முன்வைப்பதில் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுள்ளதை மக்கள் தற்போது உணரத் தொடங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தத் தேர்தல் பின்னடைவு தற்காலிகமானது என்றும், மக்களின் தேவைகளை உணர்ந்து கட்சித் தொடர்ந்தும் மக்கள் பணியாற்றும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை வெளியிட்டார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...