கனமழையில் தத்தளிக்கும் கேரளா!

kerala

kerala

கேரளாவில் கன மழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும்,  நிலச்சரிவில் சிக்கிய 12 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபி கடல் மற்றும் வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, கேரளாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

இந்தநிலையில்,  கேரளாவில் 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவின் பத்தனம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர், ஆகிய 5 மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.

இதற்கிடையே, கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால், நீர் நிலைகளுக்கு அருகில் மக்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து, இடுக்கி மாவட்டம் தொடுபுழாவில் ஒருவர் பலியாகியுள்ளார்.  இதேபோன்று, கோட்டயம் நகரின் ஊரகப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இதில் சிக்கிய 12 பேரை காணவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version