images 1 4
செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை கிளைத் தெரிவு: சோமசுந்தரம் சுகிர்தன் தலைவராகப் பொறுப்பேற்பு!

Share

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளைத் தெரிவு மாவிட்டபுரத்தில் நேற்று (அக்21) நடைபெற்றது.

நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய நிர்வாகத் தெரிவின்படி, காங்கேசன்துறை தொகுதிக் கிளையின் முக்கியப் பொறுப்பாளர்கள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்:

தலைவர்: வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்
உப தலைவர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா
செயலாளர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ்
உப செயலாளர்: முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மரியதாஸ்
பொருளாளர்: வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கர்

மேலும், 21 வட்டாரங்களைக் கொண்ட வலி வடக்கில், நிர்வாக முக்கியப் பொறுப்புகளில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வட்டாரங்களைத் தவிர்த்து, ஏனைய வட்டாரங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இது குறித்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினை முதலான நடைமுறை ரீதியான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மக்களுக்குச் சிறந்த பணியாற்றுவதே இந்தப் புதிய நிர்வாகத் தெரிவின் குறிக்கோள் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...