images 1 4
செய்திகள்இலங்கை

தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை கிளைத் தெரிவு: சோமசுந்தரம் சுகிர்தன் தலைவராகப் பொறுப்பேற்பு!

Share

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளைத் தெரிவு மாவிட்டபுரத்தில் நேற்று (அக்21) நடைபெற்றது.

நேற்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் செயலாளர் சுமந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

புதிய நிர்வாகத் தெரிவின்படி, காங்கேசன்துறை தொகுதிக் கிளையின் முக்கியப் பொறுப்பாளர்கள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்:

தலைவர்: வலி வடக்கு பிரதேச சபைத் தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன்
உப தலைவர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் தங்கராசா
செயலாளர்: வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் விஜயராஜ்
உப செயலாளர்: முன்னாள் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினர் மரியதாஸ்
பொருளாளர்: வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் உதயசங்கர்

மேலும், 21 வட்டாரங்களைக் கொண்ட வலி வடக்கில், நிர்வாக முக்கியப் பொறுப்புகளில் தெரிவு செய்யப்பட்டவர்களின் வட்டாரங்களைத் தவிர்த்து, ஏனைய வட்டாரங்களுக்குப் பொறுப்பாக ஒவ்வொருவர் தெரிவு செய்யப்பட்டனர்.

கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் இது குறித்துத் தெரிவிக்கையில், எதிர்காலத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் நுண்கடன் பிரச்சினை முதலான நடைமுறை ரீதியான பிரச்சினைகளை வெளிக்கொணர்ந்து, உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்து மக்களுக்குச் சிறந்த பணியாற்றுவதே இந்தப் புதிய நிர்வாகத் தெரிவின் குறிக்கோள் என்று குறிப்பிட்டது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Rain 1200px 22 10 17
செய்திகள்இலங்கை

யாழ்ப்பாணம் – அச்சுவேலியில் அதிக மழைவீழ்ச்சி: கடற்பரப்புகளில் பலத்த காற்று வீச எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலையின் மத்தியில், யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியிலேயே அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக...

images 5 1
செய்திகள்இலங்கைசினிமாபொழுதுபோக்கு

விஜய்-சூர்யா-வடிவேலுவின் ‘Friends’ திரைப்படம் 4K தரத்தில் மீண்டும் வெளியீடு!

நடிகர்கள் விஜய், சூர்யா மற்றும் வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘ப்ரண்ட்ஸ்’ (Friends) திரைப்படம் மீண்டும்...

images 4 1
செய்திகள்இலங்கை

பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள்: QR குறியீட்டு வவுச்சர்கள் வழங்க அமைச்சரவை ஒப்புதல்!

2026 ஆம் ஆண்டிற்காகத் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்குப் பாதணிகளைப்...

1720617259 Piyumi 2
செய்திகள்இலங்கை

பாதாள உலகக் குற்றவாளி ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான தொடர்பு: நடிகை பியூமி ஹன்சமாலியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை!

தற்போது பொலிஸ் காவலில் உள்ள பாதாள உலகக் குற்றவாளியான ‘கெஹல்பத்தர பத்மே’வுடனான உறவு குறித்து நடிகை...