செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகவியலாளர் பயங்கரவாத பிரிவுக்கு அழைப்பு-கிளிநொச்சி ஊடக அமையம் கண்டனம்!!

Share

கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பரராஜசிங்கம் சுஜீவனை கொழும்பு
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நாளை (17) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பானை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இச்செயற்பாட்டை கண்டித்து கிளிநொச்சி ஊடக அமையம் கண்டன அறிக்கை வெளியீட்டுள்ளது.

கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை,
அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றமை, தாக்கப்படுகின்றமை போன்ற செயற்பாடுகள்
ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தையும், தொடர்ந்து ஊடகப் பணியை
மேற்கொள்வதில் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான நெருக்கடிகள் மிகுந்த கவலையினை
ஏற்படுத்தியுள்ளது என்பதுடன் நாட்டின் ஊடகத்துறை மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்பட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது பணிகளை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 6 2
செய்திகள்உலகம்

பிரித்தானியாவில் புதிய சகாப்தம்: கடவுச்சீட்டு சோதனை இல்லை, நீண்ட வரிசை இல்லை! – AI மூலம் விமான நிலையங்களில் முக ஸ்கேன் அனுமதி!

பிரித்தானியா, தனது விமான நிலையம் ஒன்றில், நவீன தொழில்நுட்பம் மூலம் கடவுச்சீட்டு சோதனை இல்லாமலே பயணிகளை...

skynews donald trump benjamin netanyahu 7080062
செய்திகள்உலகம்

ஊழல் வழக்கில் நெதன்யாகுவை மன்னிக்க வேண்டும்: ட்ரம்ப் கடிதத்துக்கு இஸ்ரேல் ஜனாதிபதி அலுவலகம் மறுப்பு!

ஊழல் வழக்குகளில் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) மன்னிக்குமாறு அந்நாட்டு ஜனாதிபதி ஐசக்...

articles2FgwJ5r85aOgQuM4EhGVg6
அரசியல்இலங்கைசெய்திகள்

நுகேகொடைப் பேரணி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நினைவூட்டவே: எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அழுத்தம் கொடுப்போம் – நாமல் ராஜபக்ச!

எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறவிருக்கும் அரசாங்கத்திற்கு எதிரான பொதுப் பேரணி, அரசாங்கம் மக்களுக்கு...

25 6915d20fc755f
செய்திகள்அரசியல்இலங்கை

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மட்டுமே; சட்டத்தின் முன் அனைவரும் சமமே”: கார்த்திகை வீரர்கள் தினத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க!

வென்றெடுக்கப்பட்ட அதிகாரம் பொதுமக்களுக்காக மாத்திரமே என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று நடைபெற்ற கார்த்திகை வீரர்கள்...