செய்திகள்அரசியல்இலங்கை

ஊடகவியலாளர் பயங்கரவாத பிரிவுக்கு அழைப்பு-கிளிநொச்சி ஊடக அமையம் கண்டனம்!!

Share

கிளிநொச்சியைச் சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளர் பரராஜசிங்கம் சுஜீவனை கொழும்பு
பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் நாளை (17) கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு விசாரணை பிரிவுக்கு வருமாறு அழைப்பானை அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில், இச்செயற்பாட்டை கண்டித்து கிளிநொச்சி ஊடக அமையம் கண்டன அறிக்கை வெளியீட்டுள்ளது.

கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“தொடர்ச்சியாக ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை,
அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றமை, தாக்கப்படுகின்றமை போன்ற செயற்பாடுகள்
ஊடகவியலாளர்கள் மத்தியில் அச்சத்தையும், தொடர்ந்து ஊடகப் பணியை
மேற்கொள்வதில் நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஊடகவியலாளர்கள் மீதான இவ்வாறான நெருக்கடிகள் மிகுந்த கவலையினை
ஏற்படுத்தியுள்ளது என்பதுடன் நாட்டின் ஊடகத்துறை மற்றும் ஊடகவியலாளர்களின் சுயாதீனத்தையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் தவிர்க்கப்பட்டு ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக தங்களது பணிகளை மேற்கொள்ளும் சூழல் உருவாக்கப்பட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
35
சினிமாசெய்திகள்

ஸ்வாசிகா யாருடைய DIE HARD FAN தெரியுமா? நேர்காணலில் மனம் திறந்த ஸ்வாசிகா..!

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்வாசிகா. இவர் பல திரைப்படங்களை நடித்தது...

33 1
சினிமாசெய்திகள்

விசில் போட தயாரா? பூஜையுடன் ஆரம்பமானது ஜீவாவின் 45வது படம்..! வைரலாகும் போட்டோஸ்!

தமிழ் சினிமா வட்டாரத்தில் இன்று ஒரு முக்கியமான தினமாக அமைந்துள்ளது. நடிகர் ஜீவா தனது 45வது...

30
சினிமாசெய்திகள்

மாளவிகா மோகனன் GQ ஷூட்டில் கவர்ச்சிகரமான லுக்…! ரசிகர்கள் மயக்கும் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவின் ஸ்டைலிஷ் குயின் மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு முறை சமூக வலைதளங்களை சிலையாய்...

34
சினிமாசெய்திகள்

“லெனின்” படத்தில் இருந்து விலகிய ஸ்ரீலீலா..!படத்தின் ஹீரோயினி யார் தெரியுமா?

பிரபல தெலுங்கு நடிகரும் தயாரிப்பாளருமான நாகார்ஜுனாவின் இளைய மகன் அகில் அக்கினேனி, புது பரிமாணத்துடன் திரையில்...