images 8
செய்திகள்இலங்கை

அரசாங்கம் 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது: கல்வி மறுசீரமைப்பைச் சாடும் ஜோசப் ஸ்டாலின்!

Share

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,பாடசாலை நேர அட்டவணை தொடர்பாகவே இதுவரை நான்கு சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலை நேரம் மீண்டும் 1.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஒரு ‘தற்காலிக முடிவு’ என அரசு கூறுவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய மறுசீரமைப்புகள் தேசிய மக்கள் சக்தியின் சொந்தத் திட்டங்கள் அல்ல. இவை கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் முன்மொழியப்பட்டு, ரணில் விக்ரமசிங்க காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படாத தோல்வியடைந்த திட்டங்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் (NIE) உள்ள பிரதான அதிகாரிகளுக்கு இந்த மறுசீரமைப்பு குறித்துப் போதிய புரிதல் இல்லை எனவும், அவர்களுக்குத் தகுதிகள் இல்லை எனவும் அவர் சாடினார்.

ஆங்கிலப் பாடத்தொகுதியைத் தயாரித்ததில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்துப் பேசிய அவர், இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) செல்வது காலத்தைக் கடத்தும் செயல் எனக் குறிப்பிட்டார்.

பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், கல்வி அமைச்சினால் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும். 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்காமல், இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடித் தீர்வு காண வேண்டும்.

கல்வி மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறான திசையில் செல்வதாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறைமையையும் பாதிக்கும் எனவும் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

 

 

Share

Recent Posts

தொடர்புடையது
22
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சம்பள உயர்வால் மகிழ்ச்சி: ஹப்புத்தளை தோட்டத் தொழிலாளர்கள் பாற்சோறு சமைத்துக் கொண்டாட்டம்!

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வுக்காக, அரசாங்கத்திற்குத் தமது நன்றிகளையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் வகையில் ஹப்புத்தளை...

20
செய்திகள்அரசியல்இலங்கை

விசாரணையை அரசியலாக்க வேண்டாம்: சுரேஷ் சலே கைது குறித்து கத்தோலிக்க திருச்சபை விசேட அறிக்கை!

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பாக முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் சுரேஷ்...

18
செய்திகள்இந்தியா

இந்தியப் பயணிகளை ஈர்க்க ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அதிரடித் திட்டம்: வாராந்திர விமானங்கள் அதிகரிப்பு மற்றும் புதிய நகரங்களுக்கு சேவை!

டெல்லியில் நடைபெற்று வரும் SATTE 2026 சுற்றுலா கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்,...