images 8
செய்திகள்இலங்கை

அரசாங்கம் 40 இலட்சம் மாணவர்களின் வாழ்க்கையுடன் விளையாடுகிறது: கல்வி மறுசீரமைப்பைச் சாடும் ஜோசப் ஸ்டாலின்!

Share

தற்போதைய அரசாங்கம் முன்னெடுத்து வரும் கல்வி மறுசீரமைப்பு நடவடிக்கைகள், தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்திற்கு முரணானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

நேற்று (03) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்,பாடசாலை நேர அட்டவணை தொடர்பாகவே இதுவரை நான்கு சுற்றுநிருபங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பாடசாலை நேரம் மீண்டும் 1.30 மணி வரை என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அது ஒரு ‘தற்காலிக முடிவு’ என அரசு கூறுவது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்போதைய மறுசீரமைப்புகள் தேசிய மக்கள் சக்தியின் சொந்தத் திட்டங்கள் அல்ல. இவை கோட்டாபய ராஜபக்ச ஆட்சியில் முன்மொழியப்பட்டு, ரணில் விக்ரமசிங்க காலத்திலும் நடைமுறைப்படுத்தப்படாத தோல்வியடைந்த திட்டங்களாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

தேசிய கல்வி நிறுவகத்தில் (NIE) உள்ள பிரதான அதிகாரிகளுக்கு இந்த மறுசீரமைப்பு குறித்துப் போதிய புரிதல் இல்லை எனவும், அவர்களுக்குத் தகுதிகள் இல்லை எனவும் அவர் சாடினார்.

ஆங்கிலப் பாடத்தொகுதியைத் தயாரித்ததில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்துப் பேசிய அவர், இது தொடர்பாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) செல்வது காலத்தைக் கடத்தும் செயல் எனக் குறிப்பிட்டார்.

பாடத்திட்டத்தைத் தயாரித்தவர்கள் யார் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், கல்வி அமைச்சினால் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க முடியும். 40 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தைப் பணயம் வைக்காமல், இந்தப் பிரச்சினைக்கு அரசு உடனடித் தீர்வு காண வேண்டும்.

கல்வி மறுசீரமைப்புப் பணிகள் ஆரம்பத்திலிருந்தே தவறான திசையில் செல்வதாகவும், இது நாட்டின் ஒட்டுமொத்தக் கல்வி முறைமையையும் பாதிக்கும் எனவும் ஆசிரியர் சங்கம் எச்சரித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
images 10 1
செய்திகள்இலங்கை

இரண்டு நாட்களில் 581 நோயாளர்கள்: இலங்கையில் டெங்கு அச்சுறுத்தல் தீவிரம் – மேல் மாகாணத்தில் அதிக பாதிப்பு!

2026 ஆம் ஆண்டின் முதல் இரண்டு நாட்களில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை, கடந்த காலங்களுடன்...

1200 675 25395250 thumbnail 16x9 1
செய்திகள்உலகம்

சிறுவர்களுக்கு எதற்கு இரத்த அழுத்தம்? இருபது ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிப்பு – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

சிறுவர்கள் மற்றும் பதின்ம வயதினரிடையே உயர் இரத்த அழுத்தப் பாதிப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இருமடங்காக...

images 12
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சிறைச்சாலை போதைப்பொருள் வலைப்பின்னல்: மஹர முன்னாள் களஞ்சியக் காப்பாளரைத் தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!

சிறைச்சாலையில் உள்ள பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருடன் இணைந்து போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது...

c062bcf6aceaa92908367ec4a579f375a27fd715ccd5277c234a953549da3bc8
உலகம்செய்திகள்

மதுரோவை உடனடியாக விடுதலை செய்: அமெரிக்காவின் நடவடிக்கையை மேலாதிக்கச் செயல் எனச் சீனா சாடல்!

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியை அமெரிக்கா கைது செய்துள்ளமைக்குச் சீனா தனது...