jeeva
செய்திகள்இலங்கை

தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகல்

Share

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுதந்தர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டிருந்த ஜீவன் தியாகராஜாவை அப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோரிய கடிமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இறுதியாகப் பங்கேற்ற ஜீவன் தியாகராஜா, தற்போது தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அவர் விரைவில் வடக்கு மாகாண ஆளுநருக்கான பொறுப்பை ஏற்பார் என அரசியல் வட்டராங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...