jeeva
செய்திகள்இலங்கை

தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகல்

Share

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுதந்தர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டிருந்த ஜீவன் தியாகராஜாவை அப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோரிய கடிமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இறுதியாகப் பங்கேற்ற ஜீவன் தியாகராஜா, தற்போது தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அவர் விரைவில் வடக்கு மாகாண ஆளுநருக்கான பொறுப்பை ஏற்பார் என அரசியல் வட்டராங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...