Osaka University Hospital
செய்திகள்உலகம்

கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்திய ஜப்பான்

Share

ஜப்பானில் கழிவறை நீரை குடிநீராகப் பயன்படுத்திய சம்பவம் ஒரு இடம்பெற்றுள்ளது.

ஜப்பானில் உள்ள மருத்துவமனை ஒன்றில், தவறுதலாக, கழிவறை நீரை 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடிநீராகப் பயன்படுத்தி உள்ளதாக அந்நாட்டு செய்தி நிறுவனமென்று செய்தி வெளியிட்டுள்ளது.

யோமுயிரி ஷிம்புன் என்ற செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,

ஒசாமா பல்கலைக்கழக வைத்தியசாலையில், சில குடிநீர் குழாய்கள், கழிவறை குழாயுடன் தவறுதலாக இணைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, குடிநீர் குழாய்களை இணைக்கும் பணியின்போது, அது தவறுதலாக, கழிவறையிலிருந்து வெளியேறும் கழிவுநீர் குழாய்களோடு இணைக்கப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியசாலையைக் கட்டி திறப்பதற்கு முன்பே இந்த தவறு நடந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அந்த கட்டடத்தில் சில சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள ஆய்வு செய்தபோதுதான், இதுவரை பாதுகாப்பற்ற தண்ணீரை குடிநீராக வைத்தியசாலை பயன்படுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது .

வைத்தியசாலை குடிநீரை பயன்படுத்தியவர்களுக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டால் அதற்கு வைத்தியசாலை சார்பில் இலவசமாக சிகிச்சையளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#world

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...