ghghr
செய்திகள்இந்தியாவிளையாட்டு

பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நிறைவு: முதலிடம் பிடித்தார் பிரபாகரன்

Share

பொங்கல் திருநாளை யோட்டி மதுரை பாலமேட்டில் இன்று காலை தொடக்கம் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு பெற்றது. நடைபெற்ற போட்டியில் 729 காளைகள் விடப்பட்டது. பாலமேட்டு ஜல்லிக்கட்டில் பொதும்பு கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மொத்தமாக 21 காளை மாடுகளை அடக்கி முதலாவது இடத்தை பெற்றுள்ளார்.

சிவகங்கை _ புலியூரை சேர்ந்த சூறாவளி என்பவரின் காளை சிறந்த காளைக்கான பரிசை வென்றது. சிறந்த காளைக்கு  காரும், பிரபாகரனிற்கு இருசக்கர வாகனம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

இதன்போது ஜல்லிக்கட்டில் வென்ற மாடுபிடி வீரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் என முதலிடம் பிடித்த வீரர் பிரபாகரன் கோரிக்கை ஒன்றை முன் வைத்தார். இது தொடர்பாக முதல்வர் அவர்கள் நல்தொரு முடிவு எடுப்பர் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் பிரபாகரன் கூறியுள்ளார்.

இதில் முன் பதிவு செய்யப்பட்ட 729 காளைகள் களத்தில் இறக்கப்பட்டன. வீரர்கள் 300 பேர், போட்டி போட்டுக் கொண்டு, காளைகளை அடக்க பாய்ந்தனர். கொரோனா காரணமாக  150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

பதிவு செய்யப்பட்ட காளைகள், கால்நடைத் துறை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் களத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.

இந்த போட்டியில் பார்வையாளர்கள் உட்பட 36 பேர் காயம் ஏற்ப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்ட தற்காலிக முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

#worldnews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 1
சினிமாசெய்திகள்

காபி விலையை கேட்டு பெட்டியை கட்டிய விஜயகாந்த், அதன்பின்… பிரபலம் சொன்ன விஷயம்

தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகர்களில் ஒருவர் தான் விஜயகாந்த். அவர் இல்லை என்றாலும் கேப்டனாக...

C1
சினிமாசெய்திகள்

கரகாட்டக்காரன் படத்திற்கு கவுண்டமணி வாங்கிய சம்பளம்.. 35 வருடங்களுக்கு முன்பே இவ்வளவா

நடிகர் கவுண்டமணி தமிழ் சினிமா ரசிகர்கள் தற்போதும் கொண்டாடும் நடிகர்களில் ஒருவர். அவரை படங்களில் பார்ப்பது...

C2
சினிமாசெய்திகள்

ராஜமௌலியை தொடர்ந்து டூரிஸ்ட் பேமிலி படத்தை பற்றி பதிவிட்ட நானி.. என்ன கூறினார் பாருங்க

சசிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடித்து இருந்த டூரிஸ்ட் பேமிலி படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு...

25
இலங்கைசெய்திகள்

நாட்டில் அனல் மின்னுற்பத்திக்கு வழங்கப்படும் முக்கியத்துவம்.. முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு

சுற்றிவர கடலிருந்தும் உப்பு இறக்குமதி செய்வதைப் போலவே நாடுழுதும் நீர், காற்று, சூரிய ஒளி என...