tamil 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நீர்வீழ்ச்சியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ்ப்பாணத்து சிறுமிகள் !

Share

அவிசாவளை, புவக்பிட்டிய தும்மோதர  குமாரி எல்ல நீர்வீழ்ச்சியில் நேற்றையதினம் நீராடச் சென்ற நிலையில் காணாமல் போன மூவரில் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் நேற்று மாலை பெய்த கடும் மழை காரணமாக திடீரென நீர்வீழ்ச்சியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நீர்வீழ்ச்சியில் நீராடிக்கொண்டிருந்த ஆறு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று நபர்களை பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

நேரில் அடித்துச்செல்லப்பட்டோரில் ஒரு யுவதியும் இரண்டு சிறுமிகளும் காணப்படுகின்றனர்.

தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தேடுதலைத் தொடர்ந்து, இரவு 11 மணியளவில் சிறுமி ஒருவரின் சடலம் நீர்வீழ்ச்சியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது.

உயிரிழந்த சிறுமி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 16 வயதுடைய எக்மன் தேவதாஸ் இஷாரா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், காணாமல் போயுள்ள இருவரையும் தேடும் பணி தொடர்கின்றது.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 19
இலங்கைசெய்திகள்

இந்திய உப்புடன் இலங்கை வரும் கப்பல்

இறக்குமதி செய்யப்படும் ஒரு தொகுதி உப்புடன், இந்திய கப்பல் ஒன்று எதிர்வரும் 28ஆம் திகதியன்று இலங்கைக்கு...

20 19
இலங்கைசெய்திகள்

2013ஆம் ஆண்டுக்குப் பின் இலங்கை வரும் நியூசிலாந்தின் வெளியுறவு அமைச்சர்

நியூசிலாந்தின் பிரதி பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்த வார...

21 13
இலங்கைசெய்திகள்

நாட்டைக் காக்கவே போரை நடாத்தினோம்..! மகிந்த பகிரங்கம்

நாட்டை விடுவித்து நிலையான அமைதியை நிலைநாட்டுவதற்காகவே தமது அரசாங்கம் போரை நடாத்தியதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த...

22 13
இலங்கைசெய்திகள்

கெஹெலிய மீண்டும் விளக்கமறியலில்..!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல(Keheliya Rambukwella) ஜூன் 3 ஆம் திகதி வரை மீண்டும்...