25 68f4bb8d53816
செய்திகள்இலங்கை

ரஃபா மற்றும் தெற்கு காசாவில் தாக்குதல்கள் தொடர்ச்சி; வடக்கு காசாவில் பலி

Share

இஸ்ரேலிய ஊடகங்களின் செய்திகளின்படி, இஸ்ரேலிய இராணுவம் ரஃபா (Rafah) மற்றும் தெற்கு காசாவின் பிற பகுதிகளிலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது.

நிலைமை குறித்துப் பிரதமர் நெதன்யாகுவுக்கும் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் அவர்களுக்கும் இடையே தொலைபேசி அழைப்பு மூலம் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலின் பொது ஒளிபரப்பாளர் தகவலின்படி, ஹமாஸ் உறுப்பினர்களுடன் நடந்த “துப்பாக்கிச் சண்டைக்குப்” பின்னரே இந்தப் புதிய தாக்குதல்கள் நடந்துள்ளன.

இதற்கிடையில், வடக்கு காசாவின் ஜபாலியா (Jabalia) பகுதியில் இஸ்ரேலிய விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதில் இரண்டு பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளதுடன் மற்றும் பலர் காயமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்ததாக மேற்கோள் காட்டப்பட்ட அறிக்கையில், “ஆபத்தான சூழ்நிலை காரணமாக நோயாளர் காவு வண்டி குழுவினரால் அந்தப் பகுதியை அடைய முடியவில்லை” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
images 10 4
செய்திகள்இலங்கை

தனியார் துறை ஊழியர்களுக்கும் ஓய்வூதியம்? அரசாங்கம் புதிய திட்டம் குறித்து ஆலோசனை!

தனியார் துறை ஊழியர்களின் எதிர்கால நலனைக் கருத்திற்கொண்டு அவர்களுக்குப் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை (Pension Scheme)...

sajith
செய்திகள்இலங்கை

நாடாளுமன்றத்தில் பரபரப்பு: பெண் ஊழியர் துன்புறுத்தல் அறிக்கை ஏன் மறைக்கப்படுகிறது? சஜித் பிரேமதாச கேள்வி!

நாடாளுமன்ற பெண் ஊழியர்கள் எதிர்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பான விசாரணை அறிக்கை, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படாமல்...

செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பு இறுதிக்கட்டத்தில்! ஊழியர்களின் நலன்களுக்கு முக்கியத்துவம் என அறிவிப்பு!

நாட்டின் எதிர்கால மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில் திட்டமிடப்பட்டுள்ள இலங்கை மின்சார சபையின் (CEB)...

96b6d210 5408 11ef b8c3 f76c0a5f70a8.jpg
செய்திகள்உலகம்

யுனுஸின் ஆட்சி சட்டவிரோதமானது! – இந்தியாவிலிருந்து ஷேக் ஹசீனா விடுத்த முதல் பகிரங்க அறிக்கை!

கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷில் ஏற்பட்ட மக்கள் புரட்சியைத் தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில்...