சிங்கப்பூரில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்ட இருவருக்கு ஒமைக்ரோன் உறுதியாகியுள்ளது. இதனால், ஒமைக்ரோன் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகம் நிலவி வருகிறது
ஒமைக்ரோனின் ஆரம்பகட்ட தகவலாக இதுவரை ஒமைக்ரோனால் உயிரிழப்பு ஏற்படவில்லை. தடுப்பூசியை எதிர்க்கும் ஆற்றலும் முழுமையாக இல்லை என்று உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில் , ஃபைஸர்-பயோ என்டெக் நிறுவனத்தின் தடுப்பூசியை 3 டோஸ் எடுத்துக்கொண்டால் ஒமைக்ரான் (B.1.1.529 ) வைரஸை அழிக்கும் என்று முதல்கட்ட ஆய்வு முடிவுகள் வெளியானது.
இதை உறுதிப்படுத்தும் வகையில் சிங்கப்பூரில் பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதனால் ஒமைக்ரோன் வைரஸ் தடுப்பூசி எதிர்ப்பாற்றல் கொண்டதா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் இருவரும் எந்த நிறுவன மருந்தை செலுத்திக் கொண்டனர் என்பது உறுதியாகத் தெரியவில்லை.
#WorldNews
Leave a comment