இந்தியாவில் விரைவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
கிரிப்டோகரன்சி டிஜிட்டல் சொத்தாக கருதப்படுவதுடன், அதற்கு 30 சதவீதம் வரி விதிக்கப்படும் . இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி அமலில் இருந்து வருகிறது.
ஜி.எஸ்.டி. வரியில் உச்சப்பட்சமே 28 சதவீதம்தான். அதையும் தாண்டி 30 சதவீதம் வரி விதிக்கப்படும்.
மேலும், ‘‘டிஜிட்டல் சொத்து டிரான்ஸ்பர் மூலம் கிடைக்கும் எந்தெவொரு வருமானத்திற்கும் 30 சதவீதம் வரி விதிக்கப்படும். கையகப்படுத்துதலுக்கான செலவைத் தவிர்த்து வேறேதுனும் செலவு மற்றும் அலவன்ஸ் போன்றவற்றிற்கு வரி குறைக்கப்படாது’’ என்றார்.
#WorldNews