25 69503ef555d16
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முல்லைத்தீவு சிறுமி உயிரிழப்பு: நிபுணர் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு – அதிரடிப் பரிந்துரைகள்!

Share

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிபுணர்கள் குழு, தனது இடைக்கால அறிக்கையை 03 முக்கிய பரிந்துரைகளுடன் சமர்ப்பித்துள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன இந்த அறிக்கையின் விபரங்களை வெளியிட்டுள்ளார். மருத்துவமனை அறிக்கைகளில் குளறுபடிகள் அல்லது முரண்பாடுகள் இருப்பதாகக் கருதப்பட்டால், அது குறித்து உடனடியாகக் காவல்துறையில் முறைப்பாடு செய்ய வேண்டும்.

அவசர சிகிச்சைப் பிரிவில் (ETU) குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதிய உத்தியோகத்தரை, உடனடியாகச் சாதாரண நோயாளர் விடுதிக்கு (Ward) மாற்ற வேண்டும். குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரைத் தனித்துச் செயற்பட விடாமல், மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரியின் நேரடி கண்காணிப்பின் கீழ் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். முறையான சிகிச்சை அளிக்கப்படாததே சிறுமியின் மரணத்திற்குப் பிரதான காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர். இது தொடர்பாக விசாரணை நடத்தவே மாகாண சுகாதார அமைச்சு இந்த நிபுணர் குழுவை நியமித்தது.

சம்பவம் தொடர்பான முழுமையான அறிக்கை இன்னும் ஒரு வார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுமையான அறிக்கை கிடைத்த பின்னரே, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிரான முறைமைசார் ஒழுக்காற்று விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...