இந்தோனேஷியாவில் புயல் வெள்ளப் பலி 631 ஆக உயர்வு: மீட்புப் பணிகள் தொடர்கின்றன!

dinamani 2025 11 28 gas8xazv AP25332344411320 750x430 1

இந்தோனேஷியாவின் அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் கடந்த வாரம் ஏற்பட்ட புயல்கள் மற்றும் கடும் வெள்ளம் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது.

அசேப் மாகாணம் மற்றும் சுமத்ரா தீவில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் புயல்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 631 ஆக உயர்ந்துள்ளது.

பல பகுதிகளில் மண்சரிவுகள் மற்றும் வெள்ளம் காரணமாக மீட்புக் குழுவினரால் மக்களை அணுக முடியாமல் இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் திடீர் வெள்ளம் மற்றும் புயல்களால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் குடியிருப்புகள், வீதிகள், கட்டிடங்கள் போன்ற உட்கட்டமைப்புகள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளும் நிவாரண நடவடிக்கைகளும் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Exit mobile version