1 10
இந்தியாசெய்திகள்

இந்திய பிரதம நீதியரசர் மீது நடந்தப்பட்ட பாதணி தாக்குதல்

Share

இந்திய பிரதம நீதியசர் கவாய் மீது நடந்தப்பட்ட பாதணி தாக்குதலை, இந்திய பிரதமர் கண்டித்துள்ளார்.

உயர் நீதிமன்ற வளாகத்தில் இந்த சம்பவம் நேற்று(6) இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் “ஒவ்வொரு இந்தியரையும் கோபப்படுத்தியுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.

நீதிமன்ற நடவடிக்கையின் போது, ​​ சட்டத்தரணி ஒருவரே பிரதம நீதியரசர் மீது பாதணியை வீசினார்.

இதனை அடுத்து அவர், பாதுகாப்புப் பணியாளர்களால் பிடிக்கப்பட்டு வெளியே அழைத்துச் செல்லப்பட்டார்.

எனினும் சம்பவத்தின் போதும் அதற்குப் பிறகும் பிரதம நீதியரசர் கவாய் எந்தவித அச்சமும் இல்லாமல் இருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேரில் கண்ட சாட்சிகளின் கூற்றுப்படி, பிரதம நீதியரசர் இந்து மதத்துக்கு எதிரான கருத்துக்களை கூறினார் என்று குற்றம் சுமத்தியே, சட்டத்தரணி, இந்த தாக்குதலை நடத்தியுள்ளார்.

சனாதன தர்மத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டேன் என்று சத்தமிட்டப்படி, அவர் தமது பாதணியை கழற்றி பிரதம நீதியரசரை நோக்கி வீசியுள்ளார்.

இந்த நிலையில் தம்மீது தாக்குதல் நடத்திய சட்டத்தரணி கிஷோரை எச்சரித்து விடுவிக்குமாறு தலைமை நீதிபதி அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டார்.

இதேவேளை குறித்த சட்டத்தரணி சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதாக, இந்திய சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...