PM Modi at Summit for Democracy
இந்தியாசெய்திகள்

இனி ஒரே நாடு – ஒரே தேர்தல் – ஒரே வாக்காளர் பட்டியல்!!

Share

இனிவரும் காலங்களில் ஒரே நாடு ஒரே தேர்தல் ஒரே வாக்காளர் பட்டியல் என்றபடி தேர்தலை நடத்தவுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாதம் 25ஆம் திகதி இந்தியாவில் தேசிய அளவில் வாக்காளர் தினம் கொண்டாடப்படுகின்றது.

நேற்றைய தினம் இந்த நாளையொட்டி ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்து கொண்டு நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்களுடன் கலந்துரையாடி இருந்தார். அப்போது பேசிய பிரதமர் மோடி,

1950-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுதந்திரமான நியாயமான தேர்தலை தேர்தல் கமிஷன் நடத்தி அதன் கண்ணியத்தை பாதுகாத்து வருகின்றது.

நம் நாட்டில் உள்ள தேர்தல் கமிஷனுக்கு அதிகாரிகளை இடமாற்றம் செய்யக் கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாடுகளில் தேர்தல் கமிஷனுக்கு அத்தகைய அதிகாரம் இன்னும் வழங்கப்படவில்லை.

1950- 52 ஆம் ஆண்டில் 45 சதவீதம் என்ற அளவில் தான் வாக்குப்பதிவு இருந்தது. ஆனால் 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் 67 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இருப்பினும் பொதுமக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரையில் அனைவரும் குறைவாக வாக்குகள் பதிவு குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

கல்வியறிவு கூடிய மற்றும் வளமான பகுதிகளாக கருதப்படுகின்ற நகர்புறங்களில் கூட குறைந்த வாக்குப்பதிவு சதவீதத்தை தான் காண முடிகின்றது.படிப்பறிவு உள்ளவர்கள் சமூக ஊடகங்களில் விவாதிக்கிறார்கள். ஆனால் வாக்களிக்க செல்வதில்லை.

ஆனால் இனி ஒவ்வொரு தேர்தலிலும் 75 சதவீத வாக்குப்பதிவு ஏற்படுவதை பாஜக தொண்டர்கள் மற்றும் பிற பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். பொதுமக்களின் ஆதார் எண் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க சமீபகாலங்களில் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது .

இது தேர்தலின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் .என்னை பொருத்தவரை தேர்தல் என்பது ஜனநாயக திருவிழா. ஆட்சிக்கு வருவதற்காக மட்டுமல்லாமல் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றவே தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றார்.




Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4 1
அரசியல்இலங்கைசெய்திகள்

உங்களது ஆட்சிக்காலத்திலேயே காணிகளை விடுவியுங்கள்: ஜனாதிபதியிடம் நாகதீப விகாராதிபதி நேரில் வலியுறுத்தல்!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் தனியார் காணிகளை மீண்டும் அவர்களிடமே ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அநுர...

25 68ed5a882ec6d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரவதை செய்த பொலிஸ் பரிசோதகருக்கு 7 ஆண்டுகள் சிறை: மொனராகலை மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

நபர் ஒருவரைத் தாக்கி காயப்படுத்தியமை மற்றும் கொடூரமாகச் சித்திரவதை செய்த குற்றத்திற்காகப் பொலிஸ் பரிசோதகர் ஒருவருக்கு...

645574 4228922 updates
உலகம்செய்திகள்

அண்டார்டிகா பனிக்கடியில் ஒளிந்திருக்கும் மர்ம உலகம்: அதிநவீன செயற்கைக்கோள் மூலம் புதிய வரைபடம் வெளியீடு!

அண்டார்டிகாவை மூடியுள்ள பல்லாயிரக்கணக்கான அடி ஆழமான பனிப்படலத்திற்குக் கீழே மறைந்திருக்கும் நிலப்பரப்பு குறித்து சர்வதேச விஞ்ஞானிகள்...

articles2FFE3TpF1W8KlSV5Uh5Ngm
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீண்டும் தண்டவாளத்தில் ரயில்கள்: திருகோணமலை, மட்டக்களப்பு இரவு நேர சேவைகள் ஜனவரி 20 முதல் ஆரம்பம்!

திட்வா (Titwa) புயல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு கோட்டையிலிருந்து திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு வரையான இரவு...