73cf41c5 d106c1a4 oil tank
செய்திகள்அரசியல்இலங்கை

திருமலை எண்ணெய் குதங்களை இந்தியா மீள வழங்குமாம்!!!

Share

இந்தியாவின் வசமுள்ள திருகோணமலை எண்ணெய் குதங்களை மீளப் பெற்றுக் கொள்வதற்கான சாதகமான முடிவு அடுத்த மாதத்தில் கிடைக்கும் என பெற்றோலிய வளத்துறை அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,

இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள 99 எண்ணெய்க் குதங்கள் அடங்கிய திருகோணமலை எண்ணெய்க்குதத் தொகுதி மீண்டும் இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக 16 மாதங்களாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மேற்படி எண்ணெய்க் குதத் தொகுதியை முகாமைத்துவம் செய்வதற்காக பெற்றொலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் மற்றுமொரு நிறுவனமாக ட்ரின்கோ பெற்றோலியம் டேர்மினல் லிமிட்டெட் என்ற பெயரில் ஒரு நிறுவனமொன்றை நாம் உருவாக்கியுள்ளோம்.

அந்த நிறுவனத்தின் ஊடாகவே மீண்டும் எண்ணெய்க் குதங்களை எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு எதிர்பார்த்துள்ளோம்.

எமது நாட்டுக்கு பாதகமான எதிலும் இணக்கம் தெரிவிப்பதற்கோ கைசாத்திடவோ நாம் இடமளிக்கமாட்டோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...