India housing project
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையில் இந்திய வீடமைப்புத் திட்டங்கள்: நிதியுதவியை 10 இலட்சமாக இரட்டிப்பாக்க இந்தியா முடிவு!

Share

இலங்கையில், முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்று முக்கிய வீடமைப்புத் திட்டங்களுக்கான நிதி உதவியை இரட்டிப்பாக்குவதற்கு இந்திய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கான இராஜதந்திர கடிதங்கள் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் நடைபெற்றது.

உயர்மட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் சமூக அபிவிருத்தித் திட்டங்களின் கீழ், கிராம சக்தி வடக்கு, கிராம சக்தி தெற்கு I மற்றும் கிராம சக்தி தெற்கு II ஆகிய மூன்று திட்டங்களுக்கான ஒப்பந்தம் 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளில் கைசாத்திடப்பட்டன.

இதன்படி, குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் தாமாகவே வீடுகளைக் கட்டும் முறைமையின் கீழ் தலா ஐந்து இலட்சம் இலங்கை ரூபாய் நிதி வழங்கப்பட்டு வந்தது.

எனினும், கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக, 2022ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், ஒதுக்கப்பட்ட நிதி ஊடாக வீடுகளை முழுமையாகக் கட்டிமுடிக்க பயனாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதனை கருத்திற்கொண்டு, இலங்கை அரசாங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஒரு வீட்டுக்கான நிதியுதவியை பத்து இலட்சம் ரூபாயாக அதிகரிக்க இந்தியா இணக்கம் தெரிவித்தது.

இந்த நிதி அதிகரிப்பை அமுல்படுத்துவதற்கான கடிதங்களை இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வீடமைப்பு, கட்டுமானம், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் குமுது லால் போகாவத்த ஆகியோர் பரிமாறிக்கொண்டனர்.

அதிகரிக்கப்பட்ட நிதியுதவியின் மூலம் ஆயிரத்து 550 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் நேரடியாகப் பயனடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...