tamilni 83 scaled
இந்தியாசெய்திகள்

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

Share

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் சிந்தனைக்குழு ஒன்றின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து, 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நுகர்வு செலவினத் தரவை மேற்கோள்காட்டியே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, இந்தியாவின் நிகர தனிநபர் நுகர்வானது, 2011 – 2012ஆம் ஆண்டில் இருந்து, ஆண்டுக்கு 2.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், கிராமப்புற வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விட 3.1 சதவீதம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமத்துவமின்மையில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிக வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மையே இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் பிரதான பங்காற்றியுள்ளது என்றும் குறித்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் தொகையின் விகிதாசாரம், 2011 – 2012ஆம் ஆண்டில் 12.2 சதவீதத்திலிருந்து 2022 – 2023ஆம் ஆண்டில் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும், சர்வதேச ஒப்பீடுகளில் பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியா தீவிர வறுமையை ஒழித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
1036524 cigar
செய்திகள்இலங்கை

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் நாடுகள்: 70.5% உடன் இந்தோனேசியா முதலிடம்; இலங்கை 8வது இடத்தில்!

அதிக ஆண்கள் சிகரெட் புகைக்கும் தரவரிசைப் பட்டியலின் முதலிடத்தில் இந்தோனேசியா உள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. இது...

MediaFile 2
செய்திகள்இந்தியா

நிகழ்நிலை சூதாட்ட செயலி வழக்கு: சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான் ரூ. 11 கோடி சொத்துகள் முடக்கம்!

ஒரு குறிப்பிட்ட நிகழ்நிலை சூதாட்ட செயலி தொடர்பான வழக்கில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்...

25 690cc39f76f96
செய்திகள்இந்தியா

மாத்தறை வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் நவம்பர் 28 அன்று தெரிவு: வர்த்தமானி வெளியீடு!

மாத்தறை, வெலிகம பிரதேச சபையின் புதிய தவிசாளர் (தலைவர்) எதிர்வரும் நவம்பர் 28ஆம் திகதி தெரிவு...

24 6718a970f1422
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு தாழங்குடாவில் விசேட அதிரடிப்படையினரின் தேடுதல்: சஹ்ரான் குழுவின் வெடிகுண்டு சோதனை நடந்ததாகக் கூறப்படும் இடத்தில் பரபரப்பு!

மட்டக்களப்பு, தாழங்குடா பகுதியில் சஹ்ரான் குழுவினரால் வெடிகுண்டுச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் இடத்தை அண்மித்த ஒரு...