tamilni 83 scaled
இந்தியாசெய்திகள்

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

Share

தீவிர வறுமையை ஒழித்த இந்தியா: பொருளாதார வல்லுநர்கள் தகவல்

இந்தியா தீவிர வறுமையை ஒழித்துவிட்டதாக அமெரிக்காவின் சிந்தனைக்குழு ஒன்றின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் தெரிவித்துள்ளனர்.

சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் ஆகிய இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து, 2022 – 2023ஆம் ஆண்டிற்கான நுகர்வு செலவினத் தரவை மேற்கோள்காட்டியே இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதற்கமைய, இந்தியாவின் நிகர தனிநபர் நுகர்வானது, 2011 – 2012ஆம் ஆண்டில் இருந்து, ஆண்டுக்கு 2.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

அத்துடன், கிராமப்புற வளர்ச்சி, நகர்ப்புற வளர்ச்சியை விட 3.1 சதவீதம் கணிசமான அளவில் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேவேளை, நகர்ப்புற மற்றும் கிராமப்புற சமத்துவமின்மையில் முன்னெப்போதும் இல்லாத அளவு சரிவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிக வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மையே இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் பிரதான பங்காற்றியுள்ளது என்றும் குறித்த வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள் தொகையின் விகிதாசாரம், 2011 – 2012ஆம் ஆண்டில் 12.2 சதவீதத்திலிருந்து 2022 – 2023ஆம் ஆண்டில் 2 சதவீதமாகக் குறைந்துள்ளது.

மேலும், சர்வதேச ஒப்பீடுகளில் பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியா தீவிர வறுமையை ஒழித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...