Nigeria
செய்திகள்உலகம்

அதிகரித்துள்ள மசூதித் தாக்குதல்கள் – நைஜீரியாவில் 18 பேர் சாவு

Share

நைஜீரியாவில் உள்ள மசூதியில் இடம்பற்ற துப்பாக்கி சூட்டில் 18பேர் சாவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நைஜீரியாவின் மஷேகு பிரதேசத்தில் மசாகுகா கிராமத்தில் உள்ள மசூதியில் மக்கள் பலர் நேற்று அதிகாலை தொழுகையில் ஈடுபட்ட வேளையில் மசூதியை சுற்றி வளைத்த மர்மநபர்கள் திடீரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

இந்த தாக்குதலில் சுமார் 18 கிராம மக்கள் சாவடைந்துள்ளனர் .

நைஜீரியாவில் இன வன்முறை பல நூற்றாண்டுகளாக இடம்பெற்று வருகிறது. இந்த ஆண்டு மட்டும் இதுவரை நூற்றுக்கணக்கான பேர் சாவடைந்துள்ளனர்.

இச் சம்பவத்தால் நைஜீரியாவின் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் பதற்றமான நிலை சூழ்ந்துள்ளது . குறிப்பாக, வடமேற்கு மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.

இதை போன்று ஒரு வாரத்திற்கு முன்பு வடமேற்கு சோகோடோ மாநிலத்தில் உள்ள கிராமப்புற பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் மசூதியில் தாக்குதல் மக்கள் மத்தியில் பெரு அச்சத்தை ஏற்படுத்தயுள்ளது.

இதுகுறித்து அந்த மாநிலபொலிஸ் அதிகாரி கருத்து தெரிவிக்கையில்,

திடீரென மசூதியை சுற்றி வளைத்த தீவிரவாதிகள் தொடர் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாகவும் அதில் 18 பேர்சாவடைந்ததாகவும் 4 பேர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவித்துள்ளார் .

மேலும் இந்த தாக்குதல் கிராம மக்களுக்கும் புலானி கால்நடை மேய்ப்பாளர்க்கும் இடையிலான மோதலாக இருக்குமென சந்தேகிக்கப்படுகின்றோமெனவும் தெரிவித்தார் .

#WORLD

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 2
செய்திகள்உலகம்

சீனாவின் மிகவும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘ஃபுஜியன்’ சேவையில் இணைப்பு: கடற்படை மேலாதிக்கத்தில் அமெரிக்காவுக்குப் போட்டி!

சீனாவின் மிகவும் திறமையான மற்றும் மேம்பட்ட விமானம் தாங்கிக் கப்பலான ஃபுஜியன் (Fujian) இன்று (நவம்பர்...

24 6714e92d5188d
செய்திகள்அரசியல்இலங்கை

என்னை ஹிட்லர் என்கிறார்கள், பாவம்: குற்றங்களைக் கட்டுப்படுத்துவது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பதிலடி!

நாட்டில் இடம்பெற்று வரும் குற்றங்களைக் கட்டுப்படுத்துவற்கு நடவடிக்கை எடுக்கும் போது தன்னைச் சிலர் ‘ஹிட்லர்’ என...

images 1 2
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணத்தில் தீடீர் சோதனைகள்: கூரிய ஆயுதங்கள் மற்றும் ஹெரோயினுடன் 9 பேர் கைது!

யாழ்ப்பாணக் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக நடத்தப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது,...

MediaFile 8
இலங்கைசெய்திகள்

போதைப்பொருள் ஒழிப்புக்கு ரூ. 2000 மில்லியன் ஒதுக்கீடு! மஹாபொல மற்றும் ஆசிரியர் மாணவர் கொடுப்பனவு ரூ. 2500 அதிகரிப்பு – ஜனாதிபதி அறிவிப்பு!

போதைப்பொருள் ஒழிப்பு, உயர்கல்வி மற்றும் தொழிற் பயிற்சியை மேம்படுத்துதல் ஆகிய துறைகளுக்காகப் பல முக்கிய நிதி...