7lkl7m9o sajith
செய்திகள்அரசியல்இலங்கை

சுற்றுலாத்துறை மறுசீரமைப்பை உடன் நடைமுறைப்படுத்துக -சஜித்!!!

Share

சுற்றுலாத்துறையின் மொத்த கடன் கட்டமைப்பை மறுசீரமைக்க அமைச்சரவை வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியது அவசியம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுலாத்துறை எதிர்நோக்கியுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வுத் திட்டங்களை உள்ளடக்கி ஐக்கிய மக்கள் சக்தியின் நிபுணர் சபை ஊடாக எதிர்க்கட்சித் தலைவர் அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.

இலங்கை பொருளாதாரத்தின் தீர்மானமிக்க துறையாகவும் அந்நிய செலாவணியை அதிகளவில் திரட்டும் துறையாகவும் விளங்கும் சுற்றுலாத்துறை, 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் தற்போது நிலவும் பெருந்தொற்று காரணமாக சீர்குலைந்துள்ளது.

இதன் காரணமாக சுற்றுலாத்துறையில் பல தொழில் வாய்ப்புகள் அற்றுப்போயுள்ளது.

இலங்கை பொருளாதாரத்தில் சுற்றுலாத்துறைக்குள்ள முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு இலங்கை அரசு, அந்த துறைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நடைமுறையிலுள்ள 2005 ஆம் ஆண்டின் 38 ஆம் இலக்க சுற்றுலா சட்டத்திற்கு பதிலாக அவசரமாக புதிய சட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தற்போதைய சூழல் உகந்ததல்ல என ஐக்கிய மக்கள் சக்தியின் நிபுணர் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகின்ற போதிலும் தீர்மானங்களை எடுக்கும் போது போதியளவு தனியார் துறையின் பங்களிப்பு தேவைப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...