FB IMG 1597921566744
செய்திகள்அரசியல்இலங்கை

தேசிய இனப்பிரச்சினையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு!

Share

தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படையாக அமையும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட உறுப்பினர் த. சித்தார்த்தன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

இன்று நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிகளால் பல நாடுகளில் கடன் வாங்க நேரிட்டுள்ளது.

வரவு செலவு திட்டத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நிதி அமைச்சர் அல்லோலப்பட வேண்டிய நிலை காணப்படுவதாக அவர் தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு கிழக்கில் பல தேவைகள் காணப்படுகின்றன. அவை நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.

சுயதொழில் முயற்சிகளுக்காக அரசாங்கம் உதவிகளை நல்கிய போதிலும் விற்பனை இன்மையால் அவை தேங்கிக் கிடக்க கூடிய நிலையே காணப்படுகின்றன.அத்தோடு வடக்கு கிழக்குக்கு உதவ முன்வரும் புலம்பெயர் தமிழர்கள் தடுத்து நிறுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

முதலீட்டின் மீதான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதன் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை பெற இயலும். இதனை செய்வதற்கு பசில் ராஜபக்சவுக்கு திறமை உள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FUK4fwSxpXY292Ae6yxC9
செய்திகள்உலகம்

மியன்மாரில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: ஒரே நாளில் இருமுறை அதிர்ந்ததால் மக்கள் அச்சம்!

மியன்மாரில் இன்று மாலை அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இது அப்பகுதி மக்களிடையே பெரும்...

court
செய்திகள்இலங்கை

கத்தோலிக்க பாதிரியார் மீது தாக்குதல்: மோட்டார் சைக்கிள் அதிரடிப்படை அதிகாரிகள் 6 பேருக்கு விளக்கமறியல்!

கத்தோலிக்க பாதிரியார் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட கம்பஹா பிராந்திய குற்றத் தடுப்பு விசாரணை...

image 2f3d7cb265
செய்திகள்இலங்கைபிராந்தியம்

70 ரூபாய் குடிநீர் போத்தல் 100 ரூபாய்க்கு விற்பனை: கொழும்பு வர்த்தகருக்கு 5 இலட்சம் ரூபாய் அபராதம்!

நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த கொழும்பிலுள்ள பிரபல வர்த்தக...

penguin viral video 1769232930
உலகம்செய்திகள்

தனிமைப் பயணம்: இணையத்தைக் கலக்கும் நிகிலிஸ்ட் பென்குயின்! தத்துவமா? அல்லது அறிவியலா?

தன் கூட்டத்தை விட்டுப் பிரிந்து, பனிபடர்ந்த மலைகளை நோக்கித் தனியாக நடந்து செல்லும் ஒரு சிறிய...