அடுத்த மாதம் இலங்கை வருகிறார் IMF தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா: பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்தத் திட்டம்!

image 931baaa309

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா (Kristalina Georgieva) அடுத்த மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

‘டித்வா’ புயலினால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுவதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ள IMF பிரதிநிதிகள் குழுவிற்கும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இடையில் நேற்று (28) ஜனாதிபதி செயலகத்தில் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது, IMF-இன் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் கிருஷ்ணா சீனிவாசன் இந்த வருகையை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தினார்.

இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள நீடிக்கப்பட்ட நிதி வசதி (EFF) வேலைத்திட்டத்தின் தற்போதைய முன்னேற்றம் மற்றும் அதன் வெற்றியை நேரடியாக ஆராய்தல்.

தொடர்ச்சியான ஆதரவு: இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு IMF-இன் மேலதிக ஒத்துழைப்பை உறுதிப்படுத்துதல். ஜனாதிபதி மற்றும் நிதி அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் எதிர்காலப் பொருளாதாரக் கொள்கைகள் குறித்துக் கலந்துரையாடல்.

இலங்கையைத் தாக்கிய டித்வா புயல் காரணமாக ஏற்பட்ட பொருளாதாரப் பாதிப்புகள் மற்றும் அவற்றுக்கான நிதி உதவிகள் குறித்தும் IMF பிரதிநிதிகள் இதன்போது விசேட கவனம் செலுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டு வரும் ஒரு முக்கிய தருணத்தில், IMF தலைவரின் இந்த வருகை சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Exit mobile version