AP01 10 2026 000005B
செய்திகள்உலகம்

என்னை விட நோபல் பரிசுக்குத் தகுதியானவர் எவருமில்லை: இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தியதாக டொனால்ட் ட்ரம்ப் பெருமிதம்!

Share

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான பாரிய போர் அபாயத்தைத் தான் தடுத்து நிறுத்தியதாகவும், அதன் அடிப்படையில் அமைதிக்கான நோபல் பரிசுக்குத் தன்னை விடத் தகுதியானவர் யாருமில்லை எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேற்று (09) எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன அதிகாரிகளுடன் நடைபெற்ற சந்திப்பின் போது ட்ரம்ப் ,

இதுவரை தான் 8 பெரிய போர்களைத் தடுத்து நிறுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதில் சில போர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்தவை என்றார்.

“இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான மோதல் போராக மாறத் தொடங்கியிருந்தது. ஏற்கனவே 8 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டிருந்தன. அந்த இக்கட்டான சூழலில் தலையிட்டு நான் போரை நிறுத்தினேன்” என அவர் உரிமை கோரினார்.

கடந்த 2025-ஆம் ஆண்டு வொஷிங்டன் வந்திருந்த பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப், அணுசக்தி பலம் கொண்ட இரு நாடுகளுக்கு இடையிலான போரைத் தடுத்து இலட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியதற்காகத் தனக்கு நன்றி தெரிவித்ததாக ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவிற்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டதை விமர்சித்த ட்ரம்ப், “ஒபாமா எதற்காகவும் எதையும் செய்ததில்லை, அவருக்கு ஏன் அந்த விருது வழங்கப்பட்டது என்றே தெரியவில்லை. ஆனால், நான் நிறுத்திய ஒவ்வொரு போருக்கும் ஒரு நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

 

 

Share
தொடர்புடையது
44522559 ravann
செய்திகள்உலகம்

மதுரோ பாணி கைது புதினுக்குப் பொருந்தாது: உக்ரைன் ஜனாதிபதியின் எதிர்பார்ப்பும் ட்ரம்பின் நேரடிப் பதிலும்!

வெனிசுவேலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அதே போன்றதொரு...

images 4 3
செய்திகள்அரசியல்இலங்கை

டக்ளஸ் தேவானந்தா ஒரு சர்வதேசக் குற்றவாளி; கைதை வெறும் கண்துடைப்பாக மாற்ற வேண்டாம் – சட்டத்தரணி சுகாஸ் கடும் சாடல்!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வெறும் ஆயுத மோசடியாளர் மட்டுமல்ல, அவர் தமிழர்களுக்கு எதிரான பல...

black flag
செய்திகள்இலங்கை

பெப்ரவரி 04 தமிழர்களின் கரிநாள்: கிளிநொச்சி மற்றும் மட்டக்களப்பில் பாரிய பேரணிக்கு அழைப்பு!

இலங்கையின் சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியை, தமிழர் தேசத்தின் “கரிநாளாக”...

External Affairs Minister S Jaishankar calls on Sri Lankan President Anura Kumara Dissanayake in Colombo on Tuesday. ANI
செய்திகள்இலங்கை

இலங்கை அரசியலில் இராஜதந்திரப் போர்: இந்தியாவின் $450 மில்லியன் நிதியுதவியும், சீனாவின் அடுத்தகட்ட நகர்வும்!

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட இந்திய மற்றும் சீன உயர்மட்டத் தூதுவர்களின் சந்திப்புகள் குறித்து இதுவரை...