un 1
செய்திகள்அரசியல்இலங்கை

மலைய மக்களின் வாழ்க்கை நிலைமையை நான் நேரடியாக பார்த்தேன் – ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா

Share

‘ஓரம் கட்டப்படுதல், பாரபட்சம், சுரண்டல் இயல்பிலான வேலை நிலைமைகள் என மிக மோசமான வாழ்க்கை நிலைமைகளை மலையகத் தமிழர்கள் அனுபவிப்பதை நான் நேரடியாக பார்த்தேன்”  என ஐ.நா நிபுணர் ஒபோகோட்டா தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே இவர் இதனை தெரிவித்தார்.

இலங்கையில் 8 நாட்கள் விஜயத்தினை மேற்கொண்டிருந்த இவர், ஒபோகாட்டா அரசாங்க அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிவில் சமூக அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், மனித உரிமைப் பாதுகாவலர்கள், கல்விமான்கள், குடிபெயர் தொழிலாளர்கள் மற்றும் ஊழியச் சுரண்டல்களினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரையும் ஒபோகாட்டா சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை அரசாங்கம் சமகால அடிமை வடிவங்களை குறைப்பதற்கான வலுவான சட்டகத்தை கொண்டுள்ளது.

எனினும் சில பலவந்த ஊழியம் மற்றும் அடிமை சேவகம் என்பவற்றுக்கு இணையாக சாதி அடிப்படையிலான பாரபட்சம், ஊழியச் சுரண்டல் காணப்படுகின்றன.

அதனை தவிர்த்து வெற்றி கொள்வதற்கு பெரும்பாலும் இலங்கை அரசாங்கம் அனைவரையும் உள்வாங்கி அனைத்து துறைகளையும் அரவணைத்து கொள்ளும் ஒரு சமூகமாக உருவாக வேண்டும் என அவர் தெரிவித்தார்.

 

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f9249630 b942 11f0 94ea 0d369b0104d5.jpg
செய்திகள்இந்தியா

விண்வெளித் துறையில் இந்தியா சாதனை: ‘பாகுபலி’ விண்கலம் மூலம் அமெரிக்க செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டது!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) வலிமைமிக்க விண்கலமான எல்.வி.எம்-3 (LVM3-M6), இன்று காலை 8:55...

images 4 6
இலங்கைஅரசியல்செய்திகள்

டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 25,000 கிலோ கிராம் போஷணைப் பொருட்களை வழங்கியது யுனிசெப்!

டிட்வா (Ditwa) சூறாவளி மற்றும் அதனால் ஏற்பட்ட வெள்ளம், மண்சரிவு காரணமாகப் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் மந்தபோஷணை...

images 3 7
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களின் பூர்விகக் காணிகளை ஆக்கிரமிக்காதீர் – நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் காட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் மற்றும் கொக்குத்தொடுவாய் பகுதிகளில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்விகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு...

chambikka
செய்திகள்அரசியல்இலங்கை

யூதர்களை இலக்கு வைத்து இலங்கையிலும் தாக்குதல் நடக்க வாய்ப்பு – பாட்டாலி சம்பிக ரணவக்க எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவில் யூதர்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலைப் போன்ற சம்பவங்கள் இலங்கையிலும் இடம்பெறக்கூடும் என முன்னாள் அமைச்சர்...