522ef67c colombo fort 1
செய்திகள்இலங்கை

துறைமுகத்தில் சிக்கிய கொள்கலன்கள்! – விசாரணைகள் விரைவில்

Share

கொழும்பு துறைமுகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்கள் அடங்கிய 1000 கொள்கலன்கள் சிக்கியுள்ளன.

கடந்த செப்டெம்பர் மாதம் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை விடுவிக்க விசேட வேலைத்திட்டம் அரசால் அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் 1000 கொள்கலன்கள் எவ்வாறு சிக்கியுள்ளன என வர்த்தக அமைச்சின் செயலாளர் பத்ரனீ ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

பருப்பு, சீனி, வெங்காயம் உள்ளிட்ட கொள்கலன்கள் இருப்பதாக கூறப்படும் இவ்விடயம் குறித்த விசாரணைகள் மிக விரைவில் மேற்கொள்ளப்படும்.  இவ் விசாரணையை மேற்கொள்ள  அமைச்சின் உள்நாட்டு வர்த்தகத்திற்கு பொறுப்பான மேலதிக செயலாளர் நியமிக்கப்படுவார் என்றார்.

மேலும், குறித்த கொள்கலன்கள் சிக்கினால் அதனை விடுவிக்க தேவையான டொலர் தொகை மத்திய வங்கியிடம் அறவிடப்படும்   எனவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...