202201131439389644 1 Boris Johnson1. L styvpf
செய்திகள்உலகம்

கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரம்! – மன்னிப்பு கோரிய பிரதமர்

Share

இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் விருந்து நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ள நிலையில், தற்போது அது சர்ச்சையில் முடிந்துள்ளது.

கடந்த 2020 – மே மாதம் இங்கிலாந்தில் கொரோனா தாக்கம் அதிகரித்த நிலையில், அங்கு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன.

இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் இங்கிலாந்து பிரதமர் தனது அலுவலக வெளிப்பகுதியில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தால் அவரது கட்சியான கன்சர்வேடிவ் கட்சி உட்பட இங்கிலாந்தின் எதிர்க்கட்சிகளும் அவரை கடும் விமர்சனம் செய்தன. இந்நிலையில், பிரதமர் போரீஸ் ஜான்சன் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றினார்.

கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை மீறி விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்டமை தவறே. இதற்காக நான் மன்னிப்பு கோருகிறேன் – என அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மர், பிரதமர் பதவியில் இருந்து போரீஸ் ஜான்சன் விலக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

#World

 

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
image 1200x800 47
செய்திகள்இந்தியா

டெல்லி AI உச்சி மாநாடு: கடைசி நேரத்தில் பின்வாங்கிய பில் கேட்ஸ்! – எப்ஸ்டீன் விவகார சர்ச்சை காரணமா?

டெல்லியில் நடைபெற்று வரும் ‘இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில்’ (India AI Impact...

image 1200x800 45
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் அதிரடி! – ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர் கைது; எப்ஸ்டீன் விவகாரத்தில் அரசு ரகசியங்களை கசியவிட்டாரா?

பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் பொது அலுவலகத்தில் தவறான நடத்தையில் ஈடுபட்டதாக எழுந்த...

image 1200x800 44
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தலைமன்னார் – இராமேஸ்வரம் கப்பல் சேவை மீண்டும்? – 310 மீட்டர் நீளத்தில் புதிய இறங்குதுறை அமைக்கத் திட்டம்!

இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமன்னார் இறங்குதுறையை (Jetty) நவீனமயமாக்குவதற்கான முதற்கட்ட மேம்பாட்டுத் திட்டம்...