சங்கானை பிரதேசத்திற்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றைய தினம் (08) சங்கானை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது மாற்றுத்திறனாளிகளுக்கு அன்பளிப்பு பொருட்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. அத்துடன் மாற்றுத்திறனாளிகளது கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்நிகழ்வில் பிரதேச செயலர் பொ. பிரேமினி , வலி மேற்கு பிரதேச சபை தவிசாளர் நடனேந்திரன், பிரதேச மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் சிவனேசன் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
#SriLankaNews
Leave a comment