அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

அச்சுவேலி பகுதியில் வீடு புகுந்து தாக்குதல்! – பொலிஸார் அசமந்தம்

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் வன்முறை கும்பல் ஒன்றின் தாக்குதலுக்கு உள்ளாகிய குடும்பமொன்று இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு தெரிவித்தும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் முறையிட்டுள்ளது.

யாழ்ப்பாணம் அச்சுவேலி மேற்கு ஜோன்ராஜா வீதியில் கைக்குழந்தையுடன் வசிக்கும் இளம் தம்பதியினர் வீட்டில் நேற்றுமுன்தினம் (14) இரவு 11 மணியளவில் கூறிய ஆயுதங்களுடன் வந்த மூவர் அடங்கிய கும்பல் வீட்டினுள் புகுந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

வீட்டின், யன்னல் கண்ணாடிகள், கதவுகள், கேட் என்பவற்றை தாக்கி அவற்றை சேதப்படுத்தியதோடு குறித்த தம்பதியினரையும் அச்சுறுத்திச் சென்றுள்ளனர்.

இத் தாக்குதலால் சுமார் 1 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் சேதமாகியுள்ளன

இந்த நிலையில்,குறித்த விடயம் தொடர்பாக அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டுள்ளனர்.எனினும் நேற்று காலை 10 மணி வரை பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தரவில்லை.

இந்நிலையில் யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்.

011 2 600x288 1

Exit mobile version