நாளை புதன்கிழமை கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
நாட்டில் பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், இத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் பாதுகாப்பு கருதியே பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. நிலவும் காலநிலையை கருத்தில் கொண்டு விடுமுறை நீடிக்கப்படுவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
#SriLankaNews