images 302
செய்திகள்இலங்கை

அரச மருத்துவமனையில் முதல்முறை: 3 மாதங்களில் IVF சிகிச்சை அறிமுகம்!

Share

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் மிக விரைவில் சோதனைக்குழாய் கருத்தரிப்பு (In Vitro Fertilization – IVF) சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அந்த மருத்துவமனையின் பணிப்பாளர் வைத்தியர் அஜித் குமார தந்த நாராயண தெரிவித்துள்ளார்.

இந்த புதிய வசதிகள் இன்னும் மூன்று மாதங்களுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தனியார் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சையைப் பெற முடியாத தம்பதிகளுக்கு, பொதுச் சுகாதாரத் துறையினூடாக ஒரு நியாயமான வாய்ப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

தற்போது இலங்கையில் ஒரு சில தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே இந்தச் சேவை உள்ளது.

ஒரு முறை (One cycle) சிகிச்சைக்கு 2 மில்லியன் முதல் 3 மில்லியன் ரூபா வரை செலவாகிறது.

இந்தச் சிகிச்சை முறை குறிப்பாக, கருப்பை குழாய்களில் அடைப்பு (Blocked fallopian tubes), விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருத்தல், ஹோர்மோன் குறைபாடுகள், நீண்டகாலமாக இனங்காணப்படாத மலட்டுத்தன்மைபோன்ற குறைபாடுகள் உள்ள தம்பதியினருக்கு உதவுகின்றது.

அரச மருத்துவமனைகளில் இது அறிமுகமாவதன் மூலம் சாதாரண மக்களும் தங்களது பெற்றோர் கனவை நனவாக்க இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

IVF என்பது ஒரு பெண்ணின் கருமுட்டையை உடலுக்கு வெளியே ஒரு ஆய்வகத்தில் விந்தணுவுடன் கருத்தரிக்கச் செய்து, பின்னர் அந்த கருவை மீண்டும் பெண்ணின் கருப்பைக்குள் மாற்றும் ஒரு மருத்துவ முறையாகும்.தம்பதியினரின் ‘பெற்றோர் கனவு’ நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...